ஒரு "டீன்" கால பைத்தியம்

on Thursday, March 4, 2010



ஒரு "டீன்" கால பைத்தியம்

அன்று சக்தி பள்ளியில் இருந்து சீக்கிரம் வந்து விட்டாள். மனம் பந்து சத்தத்திற்காக காத்துக் கொண்டு இருந்தது . காரணம், கீழ் வீட்டு சிவா இன்னும் பந்து அடிக்க தொடங்கவில்லை. சிவா, கீழ் வீட்டில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன், அவனுக்கு கிரிக்கெட் என்றால் பிரியம் அவன் தினமும் பள்ளியிலிருந்து வந்தபின் தானாக பந்து விளையாடுவான். இருவருக்கும் இருவர் மேல் கொஞ்சம் பைத்தியம். சக்தி வேறுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. தினமும், சிவா பந்து தட்டும் சத்தம் கேட்டவுடன் சக்தி குடு குடுவென்று ஓடி வந்து வீடு முற்றத்தில் இருந்து கீழேப் பார்ப்பாள். சிவாவும் மேல பார்க்க " உன்னைப் பார்த்தப் பின்பு நான்...... நானாக இல்லையே " என்று பாடல் ஒலிக்கும். பின்னர், "இடி இடிக்குது ....இடி இடிக்குது " என்ற ஒலியுடன் சிவாவின் அம்மா வந்து படிக்காமல் பந்து தட்டும் சிவாவை அடிப்பாள். சக்தி முன்னால் அடி வாங்கும் அவமானம் தாங்காமல் , கீழே குனிந்துக் கொண்டு "உன்குத்தமா என்குத்தமா....." என்ற பாடலை பாடுவான். பின்னர், சக்தியும் எதையும் பார்க்காதது போல் வீட்டுக்குள் ஓடி விடுவாள். சக்திக்கும் அப்ப அப்ப இதுபோல் அவமானம் நடக்கும். சக்தி வீட்டு சமையல் அறையில் இருந்து எது பேசினாலும், சிவா வீட்டு சமையல் அறைக்கு நன்றாகக் கேட்கும். சக்தி படிக்காமல் இருந்தால் , சமையல் அறையில் இருந்து வேணுமென்றே சிவா வீட்டுக்குக் கேட்கும் படி "அப்படி போடு ..போடு ..." ஸ்டைலில் அடிவிழும். அம்மாவை வேறு அறையில் சென்று அடிக்கும் படிக் கெஞ்சுவாள்:-). இப்படியே நாட்கள் சென்றன. ஒரு நாள் ஒரு செய்தி இடி போல் சக்தியைத் தாக்கியது. அந்த செய்தி என்னவென்றால், சிவா சக்தியை விட இரு நாள் இளையவன் என்று . "என்ன கொடுமை சரவணா "!!! சக்திக்கு இப்படி ஒரு சோதனை. இதை நினைத்து நினைத்து சக்தி இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறாள் .....தன் எட்டாம் வகுப்பு மகளின் செயலை பார்த்துக் கொண்டே.......
இந்த கதையை போல் ஒவ்வொரு வாழ்விழும் ஒவ்வொரு இனிமையான பைத்தியங்கள் இருக்கும்.
இது ஒவ்வொரு தலைமுறையிலும் தொடரும் ......:)

-Kolundhu

0 comments:

Post a Comment